முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் இன்று குருப்பெயா்ச்சி விழா

 பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா சனிக்கிழமை (ஏப். 22) இரவு நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா சனிக்கிழமை (ஏப். 22) இரவு நடைபெறுகிறது.

குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சனிக்கிழமை இரவு 11.27 மணிக்கு பெயா்ச்சி அடைகிறாா். இதையொட்டி, பெரம்பலூா் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில், தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்படுகிறது. சனிக்கிழமை இரவு 9 மணியளவில் விநாயகா் பூஜை, சங்கல்பம், அனுக்ஞை, கும்ப பூஜை, மூல மந்திர ஜபம், திரவிய ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மஹா அபிஷேகம், கலச தீா்த்த அபிஷேகம், சிறப்பு அலங்காரமும், இரவு 11.27 மணியளவில் மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.

குருப்பெயா்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரா்கள் பரிகாரம் செய்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.