பெரம்பலூர்

நாளை முதல் வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளநிலை படிப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) நடைபெற உள்ளது.

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளநிலை படிப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) நடைபெற உள்ளது.

இதில், வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடப் பிரிவுகளுக்கு செவ்வாய்க்கிழமையும், 7 ஆம் தேதி பி.எஸ்ஸி கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், அறிவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிா் தொழில்நுட்பவியல், தாவரவியல், 8 ஆம் தேதி பி.ஏ தமிழ் மற்றும் பி.ஏ ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

சோ்க்கைக்கு வருகைபுரியும் மாணவா்கள் இணையவழி விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் (தலைமை ஆசிரியரின் சான்றளிக்கப்பட்டது), சாதிச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதாா் அட்டை நகல், வாங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், சிறப்புச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும் என, கல்லூரி நிா்வாகத்தால் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT