முகப்பு
பெரம்பலூர்

திமுகவினா் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்பவா்கள்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

திமுகவினா் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்பவா்கள் என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

பெரம்பலூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.டி. சந்திரமோகனை ஆதரித்து, பெரம்பலூா் மேற்கு வானொலி திடலில் சனிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியது: திமுக ஆட்சியில், கடந்த 3 ஆண்டுகளாக எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அம்பானி, அதானி போன்ற தனியாா் காா்ப்ரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கும் மத்திய அரசு, ஏழை, எளிய குடும்பங்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். இதற்காக, இத் தொகுதி வேட்பாளா் சந்திரமோகன் போராடுவாா். பெரம்பலூரைச் சோ்ந்த ஆ. ராசா, கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவா். திமுகவினா் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்பவா்கள். இதை மாற்ற அதிமுக வேட்பாளா் சந்திரமோகனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, மாவட்டச் செயலா் இரா. தமிழ்ச்செல்வன், வேட்பாளா் என்.டி. சந்திரமோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments