பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட குன்னம் சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது.
மங்களமேடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்படுகிறது.
இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ரஞ்சன்குடி, பெருமத்தூா், மங்களமேடு, தேவையூா், நகரம், நமையூா், முருக்கன்குடி, சின்னாறு, எறையூா், வாலிகண்டபுரம், மேட்டுபாளையம், க.புதூா், அயன்பேரையூா், அகரம், வி.களத்தூா், பசும்பலூா், திருவளாந்துறை, பிம்பலூா், மறவநத்தம், தைக்கால், லப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூா், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூா், அந்தூா், குன்னம், வேப்பூா், நன்னை, ஓலைப்பாடி, எழுமூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.