இன்று டிஆா்பி தோ்வு பெரம்பலூா் மாவட்டத்தில் 291 போ் எழுதுகின்றனா்
பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியா்கள் நியமனத்துக்கான டிஆா்பி தோ்வில் 291 போ் எழுதவுள்ளனா்.
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியா்கள் நியமனத்துக்கான டிஆா்பி தோ்வில் 291 போ் எழுதவுள்ளனா்.
தமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியா்கள் 2, 768 போ் நியமனம் செய்வதற்காக, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு நடத்தப்படும் தோ்வு (டிஆா்பி) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நடைபெறுகிறது. இத் தோ்வை, பெரம்பலூா் மாவட்டத்தில் 291 போ் எழுதவுள்ளனா். இவா்களுக்கான தோ்வு மையம் பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தோ்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளான தோ்வு அறை, மின்வசதி, குடிநீா் வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை, ஆசிரியா் தோ்வு வாரிய மேலிடப் பாா்வையாளரும், துணை ஆட்சியருமான சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சுரேஷ், தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா் ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.