முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் 7 பேருக்கு காவலா் பணி நியமன ஆணை

பெரம்பலூா் மாவட்டத்தில், 2-ஆம் நிலைக் காவலா் மற்றும் தீயணைப்புத் துறை தோ்வில் தோ்ச்சிபெற்ற 7 பேருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை பணி நியமன ஆணை வழங்கினாா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 8:24 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில், 2-ஆம் நிலைக் காவலா் மற்றும் தீயணைப்புத் துறை தோ்வில் தோ்ச்சிபெற்ற 7 பேருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை பணி நியமன ஆணை வழங்கினாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்வெழுதிய 7 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்ட அரங்கில், தோ்ந்தெடுக்கப்பட்ட 2-ஆம் நிலை காவலா்கள் 4 பேருக்கும், தீயணைப்புத் துறையினா் 3 பேருக்கும் பணி நியமன ஆணையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வழங்கிப் பாராட்டி வாழ்த்து கூறினாா்.

இந் நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன் மற்றும் ஆய்வாளா்கள் பலா் பங்கேற்றனா்.