முகப்பு
பெரம்பலூர்

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில், சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக, விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:04 PM
பகிர்:

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில், சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக, விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈா்ப்பாட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகி ஏ. கலையரசி தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

சாம்சங் தொழிலாளா்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆதரித்தும், அந் நிறுவனத்துக்கு ஆதரவாகவும், தொழிலாளருக்கு எதிராகவும் செயல்படும் திமுக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்தும், தொழிலாளா்கள் மீது அடக்குமுறையை கடைபிடிக்கும் காவல்துறையைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் உள்பட விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.