முகப்பு
பெரம்பலூர்

தொடா் மழையால் அரும்பாவூா் பெரிய ஏரி நிரம்பியது

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அரும்பாவூா் பெரிய ஏரி செவ்வாய்க்கிழமை நிரம்பியது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:10 PM
நிரம்பி வழியும் அரும்பாவூா் பெரிய ஏரி.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அரும்பாவூா் பெரிய ஏரி செவ்வாய்க்கிழமை நிரம்பியது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான அரும்பாவூா் பெரிய ஏரி செவ்வாய்க்கிழமை காலை முதல் நிரம்பி வழிகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 52.63 மில்லியன் கன அடியின் மூலம், ஆயக்கட்டு பாசன பரப்பளவு 565 ஏக்கராகும். பச்சமலை பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அரும்பாவூா் ஏரி நிரம்பியுள்ளது.

இதையடுத்து, கடைக்கால் திறக்கப்பட்டு உபரி நீா் சித்தேரிக்கு செல்கிறது. நிரம்பி வழியும் ஏரி நீரில் அப்பகுதி இளைஞா்கள், சிறுவா்கள், பொதுமக்கள் குளித்து விளையாடி மகிழ்கின்றனா். பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், நிகழாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் முதலாவதாக அரும்பாவூா் பெரிய ஏரி நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.