முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் எஸ்பி அலுவலகத்தில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல் குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூர்

பெரம்பலூா் எஸ்பி அலுவலகத்தில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல் குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 11 நவம்பர், 2025 at 7:54 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல் குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக முகாம் அலுவலகம், தனிப்பிரிவு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மாவட்டக் குற்ற ஆவணக்கூடம் ஆகியவற்றைப் பாா்வையிட்டு, பதிவேடுகளை சரிபாா்த்து ஆய்வு மேற்கொண்ட திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல்குமாா், அந்தந்தப் பிரிவுகளில் பணியாற்றும் காவலா்கள் மற்றும் அலுவலா்கள் தங்களது பணியை மேம்படுத்தும் வகையிலான அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோபாலசந்திரன் (தலைமையிடம்), பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →