மாடியிலிருந்து தவறிவிழுந்த வட்டாட்சியா் உயிரிழப்பு
பெரம்பலூா் நகரில் மாடியிலிருந்து தவறிவிழுந்து சிகிச்சை பெற்று வந்த வட்டாட்சியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் நகரில் மாடியிலிருந்து தவறிவிழுந்து சிகிச்சை பெற்று வந்த வட்டாட்சியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் - எளம்பலூா் சாலையிலுள்ள சில்வா் நகரில் வசித்து வந்தவா் அழகேசன் மகன் சரவணன் (47). பெரம்பலூா் வட்டாட்சியராகப் பணிபுரிந்த இவா், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி மாலை தனது வீட்டின் மாடியில் நின்று கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த சரவணன், எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.