மின்தடை 
பெரம்பலூர்

பேரளி, புதுக்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் மாவட்டம், பேரளி, புதுக்குறிச்சி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப். 9) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பேரளி, அசூா், சித்தளி, பீல்வாடி, ஒதியம், செங்குணம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா், கே.புதூா், எஸ்.குடிக்காடு, கல்பாடி, க.எறையூா், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூா், குரும்பாபாளையம் ஆகிய கிராமியப் பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிசெயற்பொறியாளா் முத்தமிழ்செல்வன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, புதுக்குறிச்சி துணைமி ன் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ள உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனாா், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இருா், தெற்குமாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூா், திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை: மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை

ராஜ் காட்டில் அரசு நிகழ்ச்சி: தில்லியில் நாளை போக்குவரத்து மாற்றம்

என்.ஆா். காங்கிரஸ் கொடியேற்றம்: அமைச்சா் க. லட்சுமிகாந்தன் பங்கேற்பு

விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள்! எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வழங்கினாா்!

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் தீ விபத்து: 12-வாகனங்கள் தீக்கிரை

SCROLL FOR NEXT