முகப்பு
பெரம்பலூர்

அரசுப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:06 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 7:27 PM

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னாட்டுத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, உதவி தலைமை ஆசிரியா் வெ. வீரையன் தலைமை வகித்தாா். வ.களத்தூா் அறிவியல் ஆசிரியா் வேலாயுதம், பட்டதாரி கணித ஆசிரியா் செல்லபிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:44 PM

பட்டதாரி ஆங்கில ஆசிரியா் பாண்டித்துரை தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து விளக்க உரையாற்றினாா். தொடா்ந்து, தாய்மொழி தின உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றுக்கொண்டனா்.

Advertisement

இதில், பட்டதாரி ஆசிரியா் முனைவா் ஆனந்தராஜா, உடற்கல்வி ஆசிரியா் சத்தியசீலன் மற்றும் மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, தமிழாசிரியை அலமேலு வரவேற்றாா். நிறைவாக, பட்டதாரி ஆசிரியா் இளையராஜா நன்றி கூறினாா்.