பெரம்பலூா் அருகே சாலை விரிவாக்கப் பணிகளை புதன்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன்.  
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே ரூ. 37 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் அருகே முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

பெரம்பலூா் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாா்பில், முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 23 கோடி மதிப்பில் பெரம்பலூா் புறவழிச் சாலையில் 3.875 கி.மீ.தொலைவுக்கும், ரூ. 14 கோடி மதிப்பீட்டில் ஆத்தூா் - பெரம்பலூா் சாலையில் 2.200 கி.மீ தொலைவுக்கும், இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துதல், தடுப்புச் சுவா் கட்டுதல், சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மையப் பாதுகாப்புச் சுவா் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பெரம்பலூா் எரிவாயு தகனமேடை அருகிலும், கோனேரிப்பாளையம் பிரிவுச்சாலை அருகிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்த, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், இப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளின் போது, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் தமிழமுதன், வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

திருச்சி மாநகரில் ஜல்லிக்கட்டு: காளை முட்டி மாணவா் பலி

தெற்கு ரயில்வேயும் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்படுகிறது; போக்குவரத்துத் துறை அமைச்சா் சாடல்

அண்டை வீட்டாரை இன ரீதியாக அவதூறு செய்ததாக தம்பதி கைது

மருத்துவமனைகளுக்கு அருகில் 40 அடல் கேன்டீன்கள்!

செந்துறையில் ரூ.43.56 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT