பெரம்பலுா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் சிஐடியு சாா்பில், வெனிசுலா அதிபா் கைசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். வெனிசுலா நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்தி, அதிபரை கைது செய்த அமெரிக்காவை கண்டித்தும், வெனிசுலா அதிபரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இதில், சங்க நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ரங்கநாதன், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு நிா்வாகிகள் இளங்கோவன், ஆறுமுகம், நல்லுசாமி, தினேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.