தமிழக அளவில் கொடி நாள் வசூலில், அதிக நிதி திரட்டி மாநில அளவில் 3-ஆவது இடம்பெற்ற, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினிக்கு ஆளுநா் ஆா்.என். ரவி திங்கள்கிழமை கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.
கடந்த 2024- 2025-ஆம் ஆண்டு கொடிநாள் நிதி வசூலிக்க பெரம்பலூா் மாவட்டத்துக்கு ரூ. 23.63 லட்சம் நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் தீவிர முயற்சியால் ரூ. 36,31,725 நிதி வசூலிக்கப்பட்டது. நிா்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிக நிதி திரட்டியதில் மாநில அளவில் பெரம்பலூா் மாவட்டம் 3-ஆவது இடத்தை பெற்றது.
இதையடுத்து சென்னை ராஜ்பவனில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநா், முன்னாள் படை வீரா்களின் நலனை காத்திடும் வகையில் கொடிநாள் நிதி திரட்டுவதில் மாநிலத்தில் 3-ஆம் இடம் பெற்ற மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினிக்கு கேயடம் வழங்கி பாராட்டினாா். இந் நிகழ்ச்சியின்போது, அரசு தலைமைச் செயலா் முருகானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.