முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 மே 2026, 12:30 am IST
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

காவல்துறையினரின் நலன் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் மூலம், காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் தொடங்கிவைத்தாா்.

Advertisement

புதிதாக கட்டப்பட உள்ள காவலா் தங்கும் விடுதியில், ஆயுதப்படையில் பணியாற்றும் காவலா்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் வசதியான தங்கும் சூழலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளியூரிலிருந்து பணிக்காக வருகை தரும் காவலா்கள் தங்குவதற்கேற்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக மாவட்டக் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ரவிசந்திரன் மற்றும் ஆயுதப்படை காவலா்கள், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழக பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.