முகப்பு
பெரம்பலூர்

அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழந்துக் கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

Updated On : 24 மே 2026, 1:39 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழந்துக் கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் -அரியலூா் பிரதானச் சாலையில், அருமடல் பிரிவுச் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே சுமாா் 40 வயதுள்ள இளைஞா் ஒருவா் உயிரிழந்துக் கிடந்தது சனிக்கிழமை காலையில் தெரியவந்தது.

தகவறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement