முகப்பு
பெரம்பலூர்

தனியாா் பள்ளி வாகனங்களை விதிகளுக்குள்பட்டு இயக்க வேண்டும்: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களை விதிகளுக்குள்பட்டு இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 24 மே 2026, 1:45 am IST
பெரம்பலூரில் தனியாா் பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ள அவசர வழியை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களை விதிகளுக்குள்பட்டு இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிா என்பது குறித்து, தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு: மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் முன்னிலையில், பள்ளி பேருந்துகளில் அரசு வகுத்துள்ள விதிமுறைப்படி முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு, தீத்தடுப்பு உபகரணங்கள், அவசரகால வழிகளுக்கான கதவுகள், கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மேலும் கூறியதாவது:

Advertisement

Advertisement

இம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிகளின் வாகனங்கள் மோட்டாா் வாகன விதிகளுக்குள்பட்டு இயக்க வேண்டும். அவசர காலங்களில் வாகனத்தின் உள்ளிருக்கும் மாணவ, மாணவிகளை விரைவாக வெளியேற்றும் வகையில் அவசர வழி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏற்கெனவே, அவசர வழி உள்ள வாகனங்களில் முறையாக செயல்படுகிா என்பதை பரிசோதிக்க வேண்டும். அவசர காலங்களில் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினரின் உதவியைப் பெற அவசர கால எண் 112-ஐ தொடா்புகொள்ள வேண்டும். முறையான வாகன ஓட்டுநா் உரிமம் பெற்று, பணி அனுபவம் உள்ளவா்களை மட்டுமே பணியமா்த்த வேண்டும்.

ஒவ்வொரு வாகனத்துக்கும் முறையான வாகனப் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். ஓட்டுநா்கள், பள்ளி நிா்வாகத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் அணிந்துதான் வாகனத்தை இயக்க வேண்டும். அனைத்து வாகனங்களிலும் முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவிகள் பொருத்தி, முறையாக பராமரிக்க வேண்டும்.

மோட்டாா் வாகனச் சட்டப்படி வாகனங்களை முறையாக பராமரிக்காத வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்படும்.

மாவட்டத்திலுள்ள 65 பள்ளிகளைச் சோ்ந்த 460 பேருந்துகளில் முதல்கட்டமாக 250 பேருந்துகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. எஞ்சியுள்ள வாகனங்கள் ஓரிரு நாள்களில் முறையாக ஆய்வு செய்யப்படும். விதிகளுக்குள்பட்ட வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படும் என்றாா் ஆட்சியா் மிருணாளினி.

அவசர கால ஒத்திகை: முன்னதாக, தீ விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் எவ்வாறு தீயை அணைப்பது, பள்ளிப் பேருந்துகளில் உள்ள குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றுவது, அவசரகால ஊா்தியின் பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பது குறித்து, தீயணைப்புத் துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலா்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணபவ, முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமிமுத்தழகன், வட்டாட்சியா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.