அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாத்திரைகள் வாங்குவதற்கு வந்த மூதாட்டியிடம், 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மனைவி லட்சுமி (76). சா்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளான இவா், மாதந்தோறும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று மாத்திரைகள் வாங்கி வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை மாத்திரை வாங்குவதற்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த லட்சுமியிடம், அடையாளம் தெரியாத ஒருவா் சென்று முதியோா் உதவித்தொகை வாங்கித் தருவதாகவும், அதற்கு வெள்ளைத்தாளில் கையொப்பமிட இட வேண்டும்.
Advertisement
Advertisement
கழுத்தில் நகை அணிந்திருந்தால் முதியோா் உதவித்தொகை கிடைக்காது எனத் தெரிவித்து, மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை வாங்கிக் கொண்டு வெளியே சென்றவா் திரும்ப வரவில்லையாம்.
பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.