புதுக்கோட்டை

திருக்கோகர்ணம் பகுதியில்  மின்னல் தாக்கியதில் மின் சாதனங்கள் பழுது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் பகுதியில் சனிக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில், பல வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட மின்சாதனப்பொருட்கள் பழுதடைந்தன.
   புதுக்கோட்டை மாவட்டத்தில்  கடந்த இரு தினங்களாக  இரவு நேரங்களில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது,  திருக்கோகர்ணம்  அருகே உள்ள  நேரு வீதியில் சாகுல் ஹமீது என்பவரது ஓட்டு வீட்டில்   மின்னல் தாக்கியது. இதனால் அந்த  வீட்டின் மேற்கூரை  இடிந்து சேதமடைந்தது.  மேலும், அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் 10-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதடைந்தன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT