புதுக்கோட்டை

தீக்காயமடைந்த பள்ளி மாணவி சாவு

DIN

கந்தர்வகோட்டை அருகே தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி புதன்கிழமை உயிரிழந்தார்.
கந்தர்வகோட்டை ஒன்றியம்,  நத்தமாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜ் மகள் ராஜேஸ்வரி (16 ). அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சமையல்
செய்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. 
இதில் உடல் முழுவதும் தீ பரவி பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவர்கள்  மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை
அதிகாலை உயிரிழந்தார். 
இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT