புதுக்கோட்டை யில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாமில் ரூ. 2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற முகாமுக்கு ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்தார். இதில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 434 மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து,
புதுக்கோட்டை விளையாட்டு அகாதெமியைச் சேர்ந்த மாணவிகள் ர.மாலதி,து.பூவிதா ஆகியோருக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு காசோலை, மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங்குவதற்கு ரூ.1லட்சத்துக்கான காசோலை என்பன உள்பட மொத்தம் ரூ.2.11 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அளித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர்அ.ராமசாமி, தனித்துனை ஆட்சியர் திரு.செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் காளீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.