புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கக் கிளை, அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பரணீதரன் தொடக்கி வைத்தார். கொள்ளை நோய்கள் தடுப்பு மருத்துவ அலுவலர் சுல்தான் முகமது பங்கேற்று பன்றிக்காய்ச்சல் வராமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார். இந்திய மருத்துவ சங்கச் செயலர் ராமமூர்த்தி, தலைவர் கரு. ராமநாதன், தனியார் மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பாளர் கே.எச். சலீம் ஆகியோர் பேசினர். இதையொட்டி 320 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.