புதுக்கோட்டை

கருமேனிஓடையில் பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், தாந்தாணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கருமேனிஓடையில் பகுதிநேர நியாய விலைக்கடையை ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சுமார் 2 கி.மீ. தூரமுள்ள சுனையக்காடு நியாயவிலைக்கடையில் பொருட்களை வாங்கிவந்த நிலையில், எம்எல்ஏவிடம் அவர்கள் வைத்த கோரிக்கையின்பேரில் இக்கடை திறக்கப்பட்டது.
சுனையக்காடு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் நடராஜன், துணைத் தலைவர் ராமையா, முன்னாள் ஊராட்சித் தலைவர் தாந்தாணி ஆனந்திசக்தி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுதா கருணாநிதி, எரிச்சி பழனிவேல், சுனையக்காடு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கச் செயலர் எம். அன்பழகன், முக்கியஸ்தர்கள் அ. கதிரேசன், வைத்திலிங்கம், இ. பன்னீர்செல்வம், கே. கருணாநிதி, அ. குமார், எஸ். சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT