புதுக்கோட்டை

ஆலங்குடி அருகேஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சாலை மறியல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடியை அடுத்த செம்பட்டிவிடுதி ஊராட்சிக்கு உள்பட்ட மேலவிடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனராம்.
மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் மண்ணை கொட்டி மேடாக்கியதால் சாலையில் மழைநீர், குட்டைபோல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மேலவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தமிழ்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல், செம்பட்டிவிடுதி போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால், கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT