புதுக்கோட்டை

அறந்தாங்கி பகுதியில் 1,855 பேருக்கு மடிக்கணினி

DIN

அறந்தாங்கி, அத்தாணி, நாகுடி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1855 மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 240 பேருக்கு, மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 360 பேருக்கு, அத்தாணியில் 854 பேருக்கு, சுப்பிரமணியபுரம் மகளிர் பள்ளியில் 202 பேருக்கு,  ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 176 பேருக்கு, நாகுடியில் 123 பேருக்கு என மொத்தம் 1855 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அறந்தாங்கி எம்எல்ஏ இ.ஏ. ரெத்தினசபாபதி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் க. சிவசண்முகம், துணைத் தலைவர் ஆ. கராத்தேகண்ணையன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ. ராஜசேகர், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் த. செல்வராஜ், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் சி. செல்லக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT