புதுக்கோட்டை

மாவட்டம் முழுதும் சோதனை புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 26 பேர் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம் முழுதும் காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில்  அனுமதியின்றி விற்பனைக்காக  புகையிலைப்பொருள் வைத்திருந்த 26  பேரை  போலீஸார் செவ்வாய்க்கிழமை  கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி புகையிலைப் பொருள் விற்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்து  நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல்  நிலையத்துக்கும் உத்தரவிட்டார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில்  புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி, மீமிசல், கோட்டைப்பட்டினம், கீரனூர், காரையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி  கடைகளில் விற்பனைக்காக புகையிலைப் பொருள் வைத்திருந்த 26 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  மூட்டைக்கணக்கில் புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

SCROLL FOR NEXT