தோப்புக்கொல்லை அகதிகள் முகாமில் காய்ச்சல் சிகிச்சை
ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில், காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவமுகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில், காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவமுகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மருத்துவமுகாமை வட்டாட்சியர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ். அருள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 117 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை அளித்தனர். திருவரங்குளம் வட்டாரவளர்ச்சி அலுவலர் ஜானகிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.