புதுக்கோட்டை

கீரமங்கலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம்,  கீரமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கீரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சங்கத்தின் ஒன்றியச் செயலர் செல்வராசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
கீரமங்கலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது.
விவசாயிகளின் பயிர்க் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேசிய, கூட்டுறவு வங்கிகளில் புதிதாக விவசாய கடன் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச்செயலர் மு. மாதவன்,  நகரச் செயலர் பவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT