புதுக்கோட்டை

மாநில குத்துச்சண்டை போட்டி: புதுகை மாணவர்கள் சிறப்பிடம்

DIN


மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் நச்சாந்துபட்டி ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின குத்துச்சண்டை போட்டிகள் திருப்பூர் மாவட்டம் முத்தூர் விவேகானந்தா மெட்ரிக். பள்ளியில் டிச. 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், நச்சாந்துபட்டி ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று சிறப்பிடம் பெற்றனர். 14 வயதிற்குள்ப்பட்ட 38 கிலோ எடைப்பிரிவில் மாணவி மு.கீர்த்திகா முதலிடத்தையும், 32 கிலோ எடைப்பிரிவில் சி.காவிகா மூன்றாம் இடத்தையும், 46 கிலோ எடைப்பிரிவில் மாணவி சு.கோகிலா மூன்றாமிடமும், 50 கிலோ எடைப்பிரிவில் மாணவன் ம. மணிகண்டன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.17 வயதிற்குள்பட்டோர் 42 கிலோ எடைப்பிரிவில் மாணவி ந.ரம்யா இரண்டாமிடத்தையும், 19 வயதிற்குள்பட்டோர் பிரிவில் மாணவன் ச. அபிமன்யு மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சனிக்கிழமை பள்ளி செயலர் கு.ராமநாதன், தலைமை ஆசிரியர்(பொ)த.தங்கமணி, உடற்கல்வி இயக்குநர் நா.ராக்கேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் மு.மங்கையர்க்கரசி, சண்முகவடிவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT