புதுக்கோட்டை

மேலைச்சிவபுரியில் புத்தகக் கண்காட்சி

DIN

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
புதுகை நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருச்சி காவேரி புத்தக நிலையம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய கண்காட்சியை சன்மார்க்க சபை துணைத் தலைவர் வி.பழனியப்பன், சபை செயலாளர் மு.விசுவநாதன் ஆகியோர்  தொடங்கி வைத்தனர். கல்லூரியின் முதல்வர் க.கனகராசு வாழ்த்திப் பேசினார். 
கண்காட்சியில் பொது அறிவு, பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கான  நூல்கள், கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், சுற்றுலா, இலக்கிய இலக்கண களஞ்சிய நூல்கள் மற்றும் பல்துறை ஆராய்ச்சி நூல்கள் இடம் பெற்றிருந்தன. மாணவ, மாணவியர் நூல்களை பார்வையிட்டு வாங்கி பயன் பெற்றனர். தமிழ்த்துறை தலைவர் தெ.திருஞானமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT