காரையூர் பள்ளி மாணவர்களுக்கு உதவி
பொன்னமராவதி அருகேயுள்ள காரையூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்பேடுகள், எழுதுபொருள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டைகாரையூர் பள்ளி மாணவர்களுக்கு உதவி
பொன்னமராவதி அருகேயுள்ள காரையூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்பேடுகள், எழுதுபொருள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகேயுள்ள காரையூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்பேடுகள், எழுதுபொருள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். லதாதேவி தலைமைவகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் பரிசுத்தம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் க. முத்துச்சாமி வரவேற்றார். விழாவில் காரையூரைச் சேர்ந்த சீதை அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் எஸ். வீரையா ரூ. 5000 மதிப்புள்ள பாடக்குறிப்பேடுகள், எழுதுபொருள்களை பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கினார். ஆசிரியர்கள் டேவிட் நெல்சன், பிரன்சிகாமேரி, மாரிமுத்து, சுமித்திரராஜ் ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.