புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மணல் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 1 டிப்பர் லாரி மற்றும் 2 மாட்டு வண்டிகளை வருவாய் கோட்டாட்சியர் பி.வி. சரவணன் வியாழக்கிழமை பறிமுதல் செய்தார்.
அறந்தாங்கி வெள்ளாற்று பகுதியில் அடிக்கடி மணல் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை கிடைத்த தகவலின்பேரில், வியாழக்கிழமை அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் காரைக்குடி சாலையில் பச்சலூர் கிராமத்தில் சோதனை நடத்திய போது அவ்வழியே திருட்டு மணல் ஏற்றி வந்த 1 டிப்பர் லாரி மற்றும் 2 மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்தார்.