புதுக்கோட்டை

ஆவுடையார்கோவிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம்,  ஆவுடையார்கோவிலில்  அனைத்து விவசாயிகள் சார்பில்  திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயி சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விவசாய சங்க நிர்வாகி எஸ்.பொன்னுசாமி துவக்க உரையாற்றினார்.   விவசாயக் கடன்களை ரத்து செய்வது, பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் 100 சதவீத இழப்பீடு வழங்குவது, ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம், காவிரி, வைகை, 
குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது,  கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில்  வேலை வழங்குவதோடு நிலுவையில் உள்ள சம்பளப் பாக்கியை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உதயம் சண்முகம், பொன்பேத்தி  எஸ்.சுந்தரபாண்டியன், கே.ஆர்.சி.டி சங்கிலி முத்துக்கருப்பையா, பி.மாரிமுத்து, வி.ஆர்.வெங்கட்ராமன், சி.ராமநாதன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முன்னதாக,  எம்.எஸ்.கலந்தர் வரவேற்றார். எஸ்.நெருப்பு முருகேஷ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT