அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, ஜேசிபி இயந்திரம் பறிமுதல்
பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய ஒரு லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய ஒரு லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பொன்னமராவதி அருகே உள்ள நெறிஞ்சிக்குடி ஊராட்சிக்குள்பட்ட கைவேலிப்பட்டியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி தலைமையிலான வருவாய்த் துறையினர் கைவேலிப்பட்டியில் சோதனை மேற்கொண்டனர்.
அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு ஜேசிபி இயந்திரம், லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு காரையூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.