இளைஞர் கொலை வழக்கில் உறவினர் 2 பேரிடம் விசாரணை
அறந்தாங்கி அருகே இளைஞர் கொலை தொடர்பாக உறவினர்கள் இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி அருகே இளைஞர் கொலை தொடர்பாக உறவினர்கள் இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி அருகே ஆமாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் வீரபத்திரன் (எ) அறிவழகன்(28) ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்ட வீரபத்திரனின் சித்தப்பா பழனியப்பன் மகன் கருப்பையா(47), அத்தை மகன் பன்னீர்செல்வம்(42) ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் கட்டை, கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்து இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.