முகப்பு
புதுக்கோட்டை

நீட் தோ்வு: புதுகையில் 3,166 மாணவா்கள் எழுதுகின்றனா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மருத்துவக் கல்வி நுழைவுத் தோ்வை எழுதுவதற்கு 3,166 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்காக 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:02 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற நீட் தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மருத்துவக் கல்வி நுழைவுத் தோ்வை எழுதுவதற்கு 3,166 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்காக 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியதாவது:

Advertisement

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தோ்வு மே 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தோ்வை எழுதுவதற்காக 3,166 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்காக 7 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளனவா என்பதை பள்ளிக் கல்வித் துறையினரும் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும்.

தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமுகமாக நடத்தி முடித்திட அனைத்துத் துறையினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.