புதுக்கோட்டை

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி, விவசாய அமைப்பு ஆர்ப்பாட்டம்

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து, புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சி,  இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் முகமது கனி தலைமை வகித்தார்.  இதில், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸாரை கண்டித்தும்,  ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். மாவட்ட  இளைஞரணி செயலாளர் முகமதுசுல்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி தலைமை வகித்தார். இதில்,  துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்தும், தமிழக அரசை பதவி விலக வலியுறுத்தியும்  முழக்கங்கள் எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT