புதுக்கோட்டை

விராலிமலை அருகே அனுமதியின்றி மதுபாட்டில் விற்றவர் கைது

DIN

விராலிமலை அருகே மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்றவரை விராலிமலை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
விராலிமலை பகுதிகளில் அனுமதியின்றி அரசு மதுபான பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து,  அப்பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது,  செட்டியபட்டியைச் சேர்ந்த பொன்னுமணி மகன் தங்கவேல் (47),  நம்பம்பட்டி பிரிவு சாலையருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார்,  அவரிடமிருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT