புதுக்கோட்டை

அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது

DIN

விராலிமலை அருகே அனுமதியின்றி மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேரை விராலிமலை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை அருகேயுள்ள கல்குடி மற்றும் கோமங்கலம் பகுதிகளில் அனுமதியின்றி கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,  விராலிமலை காவல் துணை ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் போலீஸார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது கோமங்கலத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் பெருமாள்(55) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த லெக்கையன் மகன் குமார் (46) ஆகிய இருவரும் அவர்களின் வீட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதைக் கண்ட போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். 
இதேபோல் கல்குடியைச் சேர்ந்த துரைச்சாமி மகன் ஐயப்பன் (43) என்பவர் அவரது வீட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பதைக் கண்டறிந்த போலீஸார் அவரையும் கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரிடம் இருந்து தலா 5 பாட்டில்கள் வீதம் மொத்தம் 15  மதுபாட்டில்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT