புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான கேரம் போட்டிகள் அக்.4, 5 -களில் நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2018-19-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில், இளநிலைப் பிரிவு - மழலை வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் சிறுவர், சிறுமிகளுக்கு ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் 4.10.2018 காலை 9 மணி முதல் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் போட்டிகள் நடைபெறும்.
முதுநிலைப் பிரிவில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் ஒற்றையர், இரட்டையர் பிரவுகளில் 5.10.2018 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவிரியில் 3.10.2018 மாலை 4 மணிக்குள் பதிய வேண்டும். போட்டிகளில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒற்றையர் பிரிவில் 7 மாணவர்களும், 7 மாணவிகளும், இரட்டையர் பிரிவில் 5 மாணவர்கள், 5 மாணவிகள் கலந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயிலும் வகுப்பு குறித்து பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து சான்றைப் பெற்று வர வேண்டும்.