புதுக்கோட்டை

பூவை மாநகர் அரசுப் பள்ளி மாணவர்கள் தூய்மை பேரணி

DIN

அறந்தாங்கி அருகே பூவைமாநகர் அரசு மேல்நலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி வியாழக்கிழமை பேரணி நடத்தினர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் வே. அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற பேரணியை முன்னாள் ஊராட்சித் தலைவர் காந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர்.
பேரணியில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  அரசு சார்பில் வீடுதோறும் கழிப்பறை திட்டத்தின் கீழ் அனைவரும் கழிப்பறை அமைத்தல் ,  திறந்தவெளியில் மலம் கழிக்கக் கூடாது உள்ளிட்ட சுகாதார விழிப்புணர்வு குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி, தெய்வேந்திரன், மான்விழி மல்லிகா, குமார் மணி, கண்ணன்,நித்யா, மாணவ மாணவிகள்  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT