புதுக்கோட்டை

மீமிசல் அருகே மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா

DIN

மீமிசல் அருகே பொய்யாதநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியடிகளின்  150-வது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை  கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை  ஆசிரியர் ஜோ. ஜோதிகிருஷ்ணா  தலைமை வகித்தார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிஎம்டி. பாட்ஷா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்  மகாத்மாவின் விடுதலைப் போராட்டங்களில் அகிம்சை வழியில் நடத்திச்சென்று வெற்றி பெற்றதை  ஆசிரியர்கள் நினைவு கூர்ந்தனர்.பின்னர்  9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பிரியதர்ஷினி, வெண்மதி, நிவேதா, தாசரதி, ராஜராஜேஸ்வரி, முத்தையா  உள்ளிட்டோர் நடித்த  மகாத்மாவின் வாழ்வில் என்ற ஓரங்க நாடகத்தை  பாராட்டி பரிசு வழங்கினர். உதவி தலைமை ஆசிரியர் சுகந்தி, பட்டதாரி ஆசிரியர்கள் ஜெயின், புகழேந்தி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT