புதுக்கோட்டை

காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

DIN

புதுக்கோட்டை திருவரங்குளம் அருகே ஆலங்குடி சாலையில் பெண்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவரங்குளம் அருகேயுள்ள தேந்தாப்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக அழுக்கான தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதைக் கண்டித்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் புதன்கிழமை காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலங்குடி சாலையில் நடைபெற்ற  மறியலால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீஸார் பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT