புதுக்கோட்டை

கோகோ போட்டிகளில் வென்றதற்குப் பாராட்டு

DIN

புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவிகள் சிபிஎஸ்சி பள்ளிகள் அளவில் நடைபெற்ற போட்டிகளில், கோகோ போட்டியில் முன்றாமிடம் பிடித்துள்ளனர்.  
திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் அண்மையில் நடைபெற்றன.
இதில் கோகோ போட்டியில் 14 வயதுக்குட்டோர் பிரிவில் 17  அணிகள் பங்கேற்றன. புதுக்கோட்டையைச் சேர்ந்த மெளண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். 
 வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் இயக்குநர் ஜோனத்தன் ஜெயபரதன், இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளி முதல்வர் ஜலஜா குமாரி, விளையாட்டு ஆசிரியை பத்மாவதி ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT