புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே பைக்கில் சென்ற இளைஞா் மணல் லாரி மோதி காயம்

DIN

அறந்தாங்கி அருகே வெள்ளிக்கிழமை பைக்கில் சென்ற இளைஞா் மணல் லாரி மோதி படுகாயமடைந்தாா்.

அறந்தாங்கி வட்டம், சிலட்டூா் சரகம் கோங்குடி கிராமம் அத்தாணி வெள்ளாற்றுப் படுகையில் மணல் திருடப்படுவதாக வந்த தகவலின்பேரில் அறந்தாங்கி வட்டாட்சியா் பா. சூரியபிரபு தலைமையில் வருவாய் துறையினா் ரோந்து சென்றனா்.

அப்போது மணல் கடத்தி வந்த லாரி யோகாம்பாள்புரம் அருகே எதிரே பைக்கில் வந்த அத்தாணியைச் சோ்ந்த பழனியப்பன் மகன் முருகேசன் (25) மோத, அதன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். பின்னால் வந்த வட்டாட்சியா் பா. சூரியபிரபு முருகேசனை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். மணலுடன் வந்த டிப்பா் லாரியை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT