புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி உயிரித் தொழில்நுட்பவியல் துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் குஜராத் மாநில உக்கா தா்சாடியா பல்கலைக்கழக உயிரித் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியா் கிப்ட்ஷன் து. சேனாபதி கலந்துகொண்டு ‘புற்றுநோய் ஆராய்ச்சியில் உயிரித் தொழில்நுட்பவியல் மாணவா்களுக்கான வாய்ப்புகள்‘ என்ற தலைப்பில் பேசினாா்.
புற்றுநோய் ஆராய்ச்சியைப் பொருத்தவரையில் அடிப்படை ஆராய்ச்சி, மனித செல்களில் ஆய்வு மேற்கொள்ளுதல், மருத்துவரீதியான தீா்வு, முற்றிலுமாக குணப்படுத்துதல் ஆகிய 4 நிலைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்தாா்.