புதுக்கோட்டை

ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல் உடைப்பு

DIN

புதுக்கோட்டை நகரிலுள்ள ஆஞ்சநேயர் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியில் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது.  இக்கோயிலின் கதவுகளில் இருந்த கம்பிகள் செவ்வாய்க்கிழமை இரவு வலைக்கப்பட்டு, உள்ளேயிருந்த உண்டியல் சாய்க்கப்பட்டிருந்தது.இதை கண்ட பக்தர்கள், புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.  இதைத் தொடர்ந்து போலீஸார் அங்கு வந்து பார்த்த போது  உண்டியல் முழுவதும் உடைத்து சாய்க்கப்பட்டு  அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்ததும்,  கோயில் கருவறை கதவுகளையும் கொள்ளயர்கள் உடைக்க முற்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அருகிலுள்ள சிசிடிவி கேமிராக்களின் பதிவுகளும் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT