புதுக்கோட்டை

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி வாய்ப்பு

DIN

புதுக்கோட்டை  மாவட்டத்தில்  வன்கொடுமையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கான மத்திய அரசின் தரமான சேவை மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் மத்திய அரசால் தரமான சேவை மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  நிர்வாகி பணியிடம் - முதுநிலை சட்டப்படிப்பு, 5 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும். தொகுப்பூதியம் ரூ. 30 ஆயிரம்.  முதுநிலை ஆலோசகர் - முதுநிலை  சமூகப் பணி பட்டம், மருத்துவ உளவியல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. தொகுப்பூதியம் ரூ.20,000  ஆகிய பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள்  தட்டச்சு செய்த விண்ணப்பத்தை  வரும் பிப். 25-க்குள் மாவட்ட சமூக நல அலுவலர், ஆட்சியர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04322 - 222270.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT