புதுக்கோட்டை

விதிகளை மீறியதாக 8 விசைப்படகுகள் பறிமுதல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம்,  ஜகதாபட்டினத்தில் இரட்டைமடி வலையில்  மீன்பிடித்ததாக 2 விசைப் படகுகள் மற்றும்  அனுமதிச் சீட்டு பெறாத 6 விசைப்படகுகள் என மொத்தம் 8 விசைப்படகுகளை மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர்  வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.அரசால் தடைசெய்யப்பட்ட  இரட்டைமடி வலையை வைத்து கோட்டைப்பட்டினம் மற்றும் ஜகதாபட்டினம் மீன்பிடி துறைமுகங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதாக  புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்வளத் துறையினர் மற்றும்  கடலோர காவல் படையினரிடம் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில், புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை  ஆய்வாளர் பாஸ்கரன்  மற்றும் திருப்புனவாசல் கடற்கரை காவல்நிலைய  ஆய்வாளர் ரகுபதி மற்றும் குழுவினர் இணைந்து சோதனை நடத்தியதில் இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி  மீன்பிடித்த இரு விசைப்படகுகளைப் பறிமுதல் செய்தனர். இதேபோல், மீன்வளத் துறையிடம் அனுமதிச்சீட்டு பெறாமல் மீன்பிடிக்கச் சென்ற 6 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து  விசாரணை நடத்திவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT